தமிழ்நாட்டில் 7.5% மருத்துவ இட ஒதுக்கீடு: ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 30) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான 7.5% உள் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்த ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பல் மருத்துவம் உட்பட மொத்தம் 613 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. நீட் தேர்வு விலக்கு குறித்து அரசு தொடர்ந்து சட்டரீதியாக போராடி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
7.5% இட ஒதுக்கீட்டு ஆணைகள்மருத்துவக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு, 494 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 119 பல் மருத்துவ இடங்களுக்கும் என மொத்தம் 613 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆணைகளைப் பெற்றனர். கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் துறையின் சார்பில் செய்து தரப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. முன்னாள் இராணுவப் பிரிவைச் சார்ந்த 11 பேருக்கும் ஆணைகள் வழங்கப்பட்டன.
"தமிழ்நாடு முதலமைச்சர் 7.5% இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக கொண்டு வந்து கடந்த 4.5 ஆண்டுகளாக சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அமைச்சர் கூறினார். இதோடு மட்டுமல்லாமல், இந்த மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக்கட்டணம் உட்பட அனைத்துக் கட்டணங்களையும் தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்று இலவசமாக ஆணைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவுக்கு தமிழ்நாடு தான் முன் மாதிரி!மேலும், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கும் 7.5% இடஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்தி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். "நீட் தேர்விற்கு விலக்கு தரவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நீண்ட காலமாக சட்ட ரீதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். நீட் தேர்வு எழுதுபவர்கள் சிரமப்பட்டு தான் தேர்வு எழுதுகிறார்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனால், தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், அரசு இலவச பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது.
நீட் தேர்வை கொண்டு வந்தது ஒன்றிய அரசு தான். எனவே, ஒன்றிய அரசு பிரதிநிதிகள் தமிழ்நாடு வரும்போது, பத்திரிகையாளர்கள் நீட் தேர்விற்கு எப்போது விலக்கு பெற்றுத் தரப்படும் என்று அவர்களிடம் கேட்க வேண்டும். நீட் தேர்வு இங்கு வருவதற்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பார்த்தும் கேள்வி எழுப்ப வேண்டும். தமிழ்நாடு அரசு நீட் தேர்வு விலக்கிற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
நீட் தேர்வு விலக்கு - நீண்ட நெடிய போராட்டம்!நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நீதிபதி இராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஆளுநர் அவர்கள் ஒப்புதல் தராமல் இருந்தார். அதன் பிறகு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆயுஷ் நிர்வாகம் என தொடர்ச்சியாக பல்வேறு விளக்கங்கள் கேட்கப்பட்டு, சட்ட வல்லுநர்கள் மூலம் ஒவ்வொரு முறையும் அதற்கான விளக்கங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நீட் விலக்கு நெடும் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது தான் கொண்டு வரப்பட்டது. அவருக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்படவில்லை. அதற்கு முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும் கொண்டு வரப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசிடம் இணக்கமாக இருந்தபோது இந்த சட்டத்தை கொண்டு வர ஒப்புதல் அளித்தார்.
சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த இடஒதுக்கீடு அனைத்து கட்சி தலைவர்களின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தார். பிறகு இன்றைய முதலமைச்சரின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு தான் 7.5% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
7.5% இட ஒதுக்கீட்டு ஆணைகள்மருத்துவக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு, 494 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 119 பல் மருத்துவ இடங்களுக்கும் என மொத்தம் 613 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆணைகளைப் பெற்றனர். கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் துறையின் சார்பில் செய்து தரப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. முன்னாள் இராணுவப் பிரிவைச் சார்ந்த 11 பேருக்கும் ஆணைகள் வழங்கப்பட்டன.
"தமிழ்நாடு முதலமைச்சர் 7.5% இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக கொண்டு வந்து கடந்த 4.5 ஆண்டுகளாக சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அமைச்சர் கூறினார். இதோடு மட்டுமல்லாமல், இந்த மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக்கட்டணம் உட்பட அனைத்துக் கட்டணங்களையும் தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்று இலவசமாக ஆணைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவுக்கு தமிழ்நாடு தான் முன் மாதிரி!மேலும், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கும் 7.5% இடஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்தி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். "நீட் தேர்விற்கு விலக்கு தரவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நீண்ட காலமாக சட்ட ரீதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். நீட் தேர்வு எழுதுபவர்கள் சிரமப்பட்டு தான் தேர்வு எழுதுகிறார்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனால், தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், அரசு இலவச பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது.
நீட் தேர்வை கொண்டு வந்தது ஒன்றிய அரசு தான். எனவே, ஒன்றிய அரசு பிரதிநிதிகள் தமிழ்நாடு வரும்போது, பத்திரிகையாளர்கள் நீட் தேர்விற்கு எப்போது விலக்கு பெற்றுத் தரப்படும் என்று அவர்களிடம் கேட்க வேண்டும். நீட் தேர்வு இங்கு வருவதற்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பார்த்தும் கேள்வி எழுப்ப வேண்டும். தமிழ்நாடு அரசு நீட் தேர்வு விலக்கிற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
நீட் தேர்வு விலக்கு - நீண்ட நெடிய போராட்டம்!நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நீதிபதி இராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஆளுநர் அவர்கள் ஒப்புதல் தராமல் இருந்தார். அதன் பிறகு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆயுஷ் நிர்வாகம் என தொடர்ச்சியாக பல்வேறு விளக்கங்கள் கேட்கப்பட்டு, சட்ட வல்லுநர்கள் மூலம் ஒவ்வொரு முறையும் அதற்கான விளக்கங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நீட் விலக்கு நெடும் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது தான் கொண்டு வரப்பட்டது. அவருக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்படவில்லை. அதற்கு முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும் கொண்டு வரப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசிடம் இணக்கமாக இருந்தபோது இந்த சட்டத்தை கொண்டு வர ஒப்புதல் அளித்தார்.
சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த இடஒதுக்கீடு அனைத்து கட்சி தலைவர்களின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தார். பிறகு இன்றைய முதலமைச்சரின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு தான் 7.5% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
Next Story