நாமக்கல் : பிரம்மாண்டமாக தயாராகும் அதிநவீன பால் பண்ணை... 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு
முட்டைக்கு பெயர் பெற்ற நாமக்கல் இனி பால் பொருட்களுக்கும் பிரபலமாக போகிறது. நாமக்கல்லில் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன பால்பண்ணை கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டன. இந்த பிரம்மாண்ட பால் பண்ணை கட்டி முடிக்கப்படும் பட்சத்தில், கொங்கு மண்டலத்தில் ஒரு பெரிய புரட்சி ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த பால்பண்ணை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பால் வரை கறக்க முடியும் என அதிகாரிகள் உறுதி அளிக்கின்றனர். மேலும் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு நாமக்கல்லில் மிகவும் பிரம்மாண்டமாக அதிநவீன முறையில் பால் பண்ணை கட்டப்பட்டு வருகிறது. தேசிய பால் மேம்பாட்டு வாரியம் சார்பில் இதற்கான பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
பால்பண்ணை கட்டுமான பணி நடைபெற்று வரும் அதே வேளையில், இதற்கு தேவையான உபகரணங்களும் 90 சதவீதம் கொள்முதல் செய்யப்பட்டு விட்டன. அதில் 40 சதவீத உபகரணங்கள் அந்தந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. அனேகமாக வரும் நவம்பர் மாதத்தில் சோதனை முறையில் பால் பண்ணையில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் ஜனவரி மாதத்துக்குள் இதனை முழுவீச்சில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
நாமக்கல்லில் இந்த பிரம்மாண்ட பால் பண்ணை திறக்கப்பட்டதும் 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர். அதாவது அவர்களிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்யப்படும். பின்னர் அந்த பால் பதப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கான பணம் சரியான நேரத்தில் செலுத்தப்படும். இது மட்டுமன்றி ஆவின் நிர்வாகத்திற்கும் இங்கிருந்து பால் சப்ளை செய்யப்படும். இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் வாடிக்கையாளர்களின் பால் தேவை தினந்தோறும் பூர்த்தி செய்யப்படும்.
பொதுவாகவே பால் மற்றும் பால் பொருட்களுக்கு தினம்தோறும் தேவை இருக்கிறது. இந்த தேவையை கருத்தில் கொண்டு நாமக்கல்லில் பிரம்மாண்ட அதிநவீன பால்பண்ணை கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் இனி பால் பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது. இது மட்டுமல்லாமல் இந்த பால்பண்ணை மூலம் ஏறத்தாழ 1,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அதாவது பால் பொருட்களை ஏற்றி செல்வது, பேக்கேஜ் செய்வது, இயந்திரங்களை கையாள்வது, தரக்கட்டுப்பாடு என பல்வேறு துறைகளில் ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர். இதன் மூலம் இளைஞர்களின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.
இங்குள்ள கருவிகள் அனைத்தும் தாமாகவே இயங்கும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பால்பொருட்களை பதப்படுத்துவது முதல் பேக்கேஜ் செய்வது வரை அனைத்தும் கருவிகள் வாயிலாக நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக பால் பண்ணையில் அனைத்து பணிகளையும் துரிதமாக முடிவுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அப்போதுதான் பரீட்சார்த்த முறையில் பால் பண்ணையை சோதனைக்கு உட்படுத்தி, முழு வீச்சில் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறது.
நாமக்கல்லில் பிரம்மாண்ட அதிநவீன பால்பண்ணை அமையும் பட்சத்தில், இனி முட்டைக்கு மட்டுமன்றி பால் பொருட்களுக்கும் நாமக்கல் தலைநகரமாக திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இந்த பால்பண்ணை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பால் வரை கறக்க முடியும் என அதிகாரிகள் உறுதி அளிக்கின்றனர். மேலும் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு நாமக்கல்லில் மிகவும் பிரம்மாண்டமாக அதிநவீன முறையில் பால் பண்ணை கட்டப்பட்டு வருகிறது. தேசிய பால் மேம்பாட்டு வாரியம் சார்பில் இதற்கான பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
பால்பண்ணை கட்டுமான பணி நடைபெற்று வரும் அதே வேளையில், இதற்கு தேவையான உபகரணங்களும் 90 சதவீதம் கொள்முதல் செய்யப்பட்டு விட்டன. அதில் 40 சதவீத உபகரணங்கள் அந்தந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. அனேகமாக வரும் நவம்பர் மாதத்தில் சோதனை முறையில் பால் பண்ணையில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் ஜனவரி மாதத்துக்குள் இதனை முழுவீச்சில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
நாமக்கல்லில் இந்த பிரம்மாண்ட பால் பண்ணை திறக்கப்பட்டதும் 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர். அதாவது அவர்களிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்யப்படும். பின்னர் அந்த பால் பதப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கான பணம் சரியான நேரத்தில் செலுத்தப்படும். இது மட்டுமன்றி ஆவின் நிர்வாகத்திற்கும் இங்கிருந்து பால் சப்ளை செய்யப்படும். இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் வாடிக்கையாளர்களின் பால் தேவை தினந்தோறும் பூர்த்தி செய்யப்படும்.
பொதுவாகவே பால் மற்றும் பால் பொருட்களுக்கு தினம்தோறும் தேவை இருக்கிறது. இந்த தேவையை கருத்தில் கொண்டு நாமக்கல்லில் பிரம்மாண்ட அதிநவீன பால்பண்ணை கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் இனி பால் பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது. இது மட்டுமல்லாமல் இந்த பால்பண்ணை மூலம் ஏறத்தாழ 1,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இங்குள்ள கருவிகள் அனைத்தும் தாமாகவே இயங்கும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பால்பொருட்களை பதப்படுத்துவது முதல் பேக்கேஜ் செய்வது வரை அனைத்தும் கருவிகள் வாயிலாக நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக பால் பண்ணையில் அனைத்து பணிகளையும் துரிதமாக முடிவுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அப்போதுதான் பரீட்சார்த்த முறையில் பால் பண்ணையை சோதனைக்கு உட்படுத்தி, முழு வீச்சில் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறது.
நாமக்கல்லில் பிரம்மாண்ட அதிநவீன பால்பண்ணை அமையும் பட்சத்தில், இனி முட்டைக்கு மட்டுமன்றி பால் பொருட்களுக்கும் நாமக்கல் தலைநகரமாக திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
Next Story